sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

'பைபாஸ் சர்ஜரிக்கு பிறகும் நெஞ்சுவலி'

/

'பைபாஸ் சர்ஜரிக்கு பிறகும் நெஞ்சுவலி'

'பைபாஸ் சர்ஜரிக்கு பிறகும் நெஞ்சுவலி'

'பைபாஸ் சர்ஜரிக்கு பிறகும் நெஞ்சுவலி'


PUBLISHED ON : ஏப் 06, 2014

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணேசன், திருநெல்வேலி: சென்னையில் உள்ள, பிரபல மருத்துவமனையில், எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து, நான்கு ஆண்டுகளாகிறது. தற்போது, நடக்கும் போது, மீண்டும் நடுநெஞ்சில் வலி ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?

பைபாஸ் சர்ஜரி என்பது, இதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால் அல்லது கைகளில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து, இதயத்தில் பொருத்தும் ஆபரேஷன். இதில் சில ஆண்டுகள் கழித்து, புதிதாக பொருத்தப்பட்ட ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டாலோ, பழைய அடைப்பு கூடினாலோ, மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு, அவசியம், 'ஆஞ்சியோகிராம்' தேவைப்படும். இதில், உங்கள் சொந்த ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா, புதிதாக பொருத்திய ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளதா என கண்டறியலாம். எந்த இடத்தில் அடைப்பு உள்ளதோ, அதை, தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையாக, 'ஸ்டென்ட்' சிகிச்சை மூலம், ஆபரேஷன் இன்றி, எளிதில் சரி செய்ய இயலும்.






      Dinamalar
      Follow us