PUBLISHED ON : ஏப் 07, 2019

* சிறு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் என் கண் பாதிக்கப்பட்டது. இதனால் எனது கண்ணை அகற்றிவிட்டு செயற்கை கண் பொருத்தி உள்ளேன். ஆனால் எனக்கு அதில் பார்வை கிடைக்க வில்லை. நான் என்ன செய்யலாம்.
கண்ணில் விழித்திரை பாதிக்கப்பட்டால் புதிய விழித்திரை பொருத்தி கண் பார்வை பெறலாம். ஆனால் கண் முழுவதும் அகற்றப்பட்டால் செயற்கை கண் மூலம் நல்ல தோற்றம் கிடைக்குமே ஒழிய பார்வை கிடைக்காது.
* நான் 25 வயது நிரம்பிய இளைஞன். எனது இரண்டு மார்பகங்களும் தடித்து பருமனாக தெரிகின்றன. அதனால் எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. நான் என்ன செய்வது?
ஆண்களுக்கு மார்பகங்கள் பருக்கும் நோயை கைனகோமேசியா என்று கூறுகிறோம். ஒரு சில நாளமில்லா சுரப்பிகள் வேறுபாட்டினால் இந்நோய் ஏற்படுகிறது. இதை இரண்டு அல்லது 3 மாத காலத்தில், அதற்கான மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் சரி செய்துவிடலாம். இல்லையென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரிபடுத்தலாம்.
* மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று பலரும் கூறுகின்றனரே! அது உண்மையா?
மீன் உணவின் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதற்கு கடல் மீன் உணவுதான் முக்கியம். குளத்து மீன்களில் அவ்வளவு பலன் கிடைக்காது. மேலும் பொரித்த மீனை தவிர்த்து, குழம்பு மீனை சாப்பிடுவது நல்லது.
-டாக்டர் மோகன் பிரசாத்
மதுரை, 98430 50822
