தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகளின் பேச்சுத்திறன் முக்கியம்

குழந்தைகளின் பேச்சுத்திறன் முக்கியம்

குழந்தைகளின் பேச்சுத்திறன் முக்கியம்


PUBLISHED ON : செப் 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு பேசும் திறன் எந்த வயதில் நன்றாக வரும்?

ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.

குழந்தைகள் பேசும் திறனுக்கு எந்தெந்த காரணங்களாக தடைகள் ஏற்படும்?

பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற் தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடை படும். நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.

அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.

கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு என்ன தீர்வு?

மருத்துவரின் ஆலோசனைப்படி செவி மற்றும் மூளையில் பிரச்னையா என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தையின் பேசும் திறன் தெளிவாக ஆரம்பிக்கும்.

கேட்கும் திறன் இருந்து பேசும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்?

இக்குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சி கொடுக்க வேண்டும். உதாரணமாக நாக்கு மற்றும் மேல்தாடை உச்சரிக்கும் வார்த்தைகளை பயிற்சி கொடுப்பதன் மூலம் பேசும் திறன் மற்றும் நாக்கின் சுழற்சி தெளிவாக மேம்படும்.

பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள்?

புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.

- டாக்டர் பிரசன்ன கார்த்தி

குழந்தைகள் நல நிபுணர், மதுரை

96299 02323.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us