PUBLISHED ON : டிச 12, 2021

அ நிறம் | அளவு
அதீத அமில சுரப்பிற்கு பயன்படுத்தப்படும் 'ஆன்டாசிட்' மருந்து தயாரிப்பாளர்கள், இனி மருந்து பாட்டில், மாத்திரை உறையில், 'தீவிர சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்' என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட வேண்டும்.
தேசிய அளவில் பல்வேறு மருந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அமில சுரப்பு, செரிமான கோளாறு, வாயு பிரச்னை, நெஞ்செரிச்சலுக்கு தரப்படும் ஆன்டாசிட் மருந்துகள், தீவிர சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு மேல் இவற்றை பயன்படுத்த கூடாது. 20 ஆண்டுகளுக்கு முன் பரவலாக நம் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்த இம்மருந்துகளை, தற்போது அனைத்து பிரிவு சிறப்பு டாக்டர்களும் பரிந்துரைக்கின்றனர்; மக்கள் தாங்களாகவே வாங்கியும் சாப்பிடுகின்றனர்.
- இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையர்,
டி.சி.ஜி.ஐ.,
