PUBLISHED ON : மார் 30, 2016

அ நிறம் | அளவு
கோடை காலத்தில் அதிகம் பரவக்கூடியது கண்களில் தொற்று. அதிக உஷ்ணத்தால், 'மெட்ராஸ் ஐ' உட்பட, பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் தொற்று இருந்தாலும், வருவதற்கு முன்கூட முன்னெச்சரிக்கைக்காக இந்த டிப்ஸ்.
* நெல்லிக்காயின் சாற்றை எடுத்து, அதைக் கொண்டு கண்களைக் கழுவலாம்
* வேப்பிலையுடன் சிறிது கல் உப்பைச் சேர்த்து அரைத்து கிடைக்கும் பேஸ்ட்டை, மூடிய கண் இமைகளின் மேல் வைக்கலாம்
* தொற்றினால் கண்களில் வலி இருந்தால், சுத்தமான துளசிச் சாற்றை, சில துளிகள் கண்களில் விடலாம்
* சிறிதளவு கொத்தமல்லி விதை தனியாவை, ஒரு டம்ளர் நீரில், இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவலாம்.
டாக்டர் பி.சரண்யா,
எஸ்.டி.ஜே.ஆயுர்வேதாலயா, கோவை
