sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது

/

கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது

கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது

கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது


PUBLISHED ON : ஏப் 15, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 15, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை பாதிப்பில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது?

பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பதுபெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்?

வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?

உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம்.வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.

கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?

குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

-டாக்டர் பிரசன்ன கார்த்திக்,

மதுரை, 96299 02323.






      Dinamalar
      Follow us