PUBLISHED ON : மார் 19, 2020

சீனாவில், ஒருவருக்கு, 'கொரோனா' பாதிப்பு உள்ளதா என்பதை, அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து, 15 நிமிடங்களில் உறுதி செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில், இதற்கு, 24 மணி நேரம் படபடக்கும் இதயத்தோடு காத்திருக்க வேண்டும்.
ஏன் இப்படி?
சர்வதேச செய்திகளின் படி, சீனா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில், 'பயோமெடோமிக்ஸ்' என்ற அமெரிக்க கம்பெனி தயாரித்துள்ள பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், 15 நிமிடங்களில் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்து விடும்.ஆனால், 80 சதவீதம் மட்டுமே முடிவுகள் சரியாக இருக்கும் என, குறிப்பிட்ட அமெரிக்க கம்பெனியே கூறியுள்ளது.நம் நாடடில், பரிசோதனை கூடத்தில், 'ரிவர்ஸ் டிரான்ஸ்க்ரிப்சன் - பாலிமெரெஸ் செயின் ரியாக் ஷன்' எனப்படும் முறையில், ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. முடிவுகள் தெரிவதற்கு, 24 மணி நேரம் ஆகலாம். ஆனால் முடிவுகள் துல்லியமாக இருக்கும்.
