தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சத்து இல்லேன்னா காலி

சத்து இல்லேன்னா காலி

சத்து இல்லேன்னா காலி


PUBLISHED ON : ஜன 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் மரபணுக்கள் தான் நம் ஆதாரம். உடல், மனம், அறிவுத்திறன் என அத்தனை சிறப்புகளுக்கும், மரபணுக்கள் தான் அதற்கு பொறுப்பு. செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் தான், தலைமுறை தலைமுறையாக தாய் - தந்தையின், அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துப் பாதுகாக்கின்றன.மரபணுக்கள் சீராகச் செயல்பட, ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை. மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக செயல்படுபவை, 'ஆன்டி ஆக்ஸிடன்ட்'கள்.

அப்படி என்றால் என்ன?

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உணவில் இருந்து பெறும் ஊட்டச்சத்துக்களாகவோ அல்லது உயிர்ச்சத்துக்களாகவோ இருக்கலாம்.

உடலில் உருவாகும் என்சைம்களாகவும் இருக்கலாம். ஆனால், எல்லா வகை ஊட்டச்சத்துக்களும், உயிர்ச்சத்துகளும், என்சைம்களும்,

ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருக்க முடியாது.

'ஆன்டி ஆக்ஸிடன்ட்'களின் பயன் என்ன?

உடலின் இயற்கையான மூப்பு வளர்ச்சியை விரைவுபடுத்த, இளமையில் முதுமைப்

பருவத்தை உருவாக்கக் கூடிய ஆற்றல் மிக்கவை, 'பிரிரேடிகல்'கள். அவை, முதுமை தோற்றத்தைக் கொடுப்பதோடு நின்று விடாமல், முதுமை பருவத்துக்கே உரிய நோய்களையும் உருவாக்கி விடும். 'ஒபிஸி' எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பிரிரேடிகல்களை

அழிக்கின்றன. அதனால், முதுமை வளர்ச்சி வேகம் குறைகிறது. இளமையில் முதுமை தோற்றம் தடுக்கப்படுகிறது.

சக்ரவர்த்தி, பொது மருத்துவர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us