தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சத்தான உணவு, யோகா, மூச்சு பயிற்சி : நோய்களை விரட்ட இது போதும்!

சத்தான உணவு, யோகா, மூச்சு பயிற்சி : நோய்களை விரட்ட இது போதும்!

சத்தான உணவு, யோகா, மூச்சு பயிற்சி : நோய்களை விரட்ட இது போதும்!


PUBLISHED ON : ஜன 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‛‛ கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என, 3000 நோயாளிகளுக்கு மேல் வைத்தியம் பார்த்து இருக்கிறோம். எல்லோரும் முழுமையாக குணம் அஅடைந்து உள்ளனர், '' என்கிறார் கஸ்தூரிபா காந்தி மெமோரியல் சித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன்

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறதே?

வைரஸ் கிருமிகளை பொறுத்தவரை, ஒரே மாதிரி தன்மையில் உருவாவதில்லை. பருவ கால மாற்றத்துக்கு ஏற்ப, அதன் தன்மை மாறுபடும். ஏற்கனவே வந்த சின்னம்மை, தட்டம்மை போன்றவையும் வைரஸ் நோய்தான்.வைரஸ் கிருமியை பொறுத்தவரை எப்படி உருவாகிறது, எப்படி மறைகிறது என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து இருக்கலாம். நம் மரபு மருத்துவத்தில் மஞ்சள், வேப்பிலை பற்று, சூரிய ஒளியில் தண்ணீரை காய வைத்து குளிக்க வைப்பது போன்ற எளிய வைத்தியங்களை செய்துதான், அம்மையை குணப்படுத்தினர். இப்போதும் அம்மைக்கு தடுப்பு ஊசிதான் போடுகிறோம். தனியாக மருந்து இல்லை. கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அப்படித்தான்.

அப்படியானால் இந்த நோய் வராமல் தடுக்க என்னதான் வழி?

சித்த மருத்துவத்தில் ஆறு காலங்களை பற்றி சொல்கிறோம். அதில் குளிர்காலம், முன் பனிக்காலம் மற்றும் பின் பனிக்காலம் ஆகிய மூன்று காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிகள் வளர்ச்சி அடையும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இல்லாத போது, இந்த கிருமிகள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் பிரச்னை இல்லை. சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, இந்த நோயை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். சூரிய ஒளி உடலில் பட வேண்டும். யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்து வந்தால், எந்த நோயும் நெருங்காது.

சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு நீங்கள் அளிக்கும் மருந்துகள், நோயை குணமாக்குவதா அல்லது எதிர்ப்பு சக்தி தருவதா?



உடலில் பல மில்லியன் செல்கள் உள்ளன. அதில் மைட்டோகாண்ட்ரியாவை, செல்களின் ஆற்றல் சாலை என்று சொல்வார்கள். இது நமது உடலில், 100 நாட்கள் வரை இருந்து செல்களை பாதுகாக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு, பிற மருந்துகளுடன் 'மிராக்கிள் டிரிங்க்' எனும் பானம் கொடுக்கிறோம். எலுமிச்சை, நார்த்தங்காய், நெல்லி போன்ற புளிப்பு சுவை உள்ள பொருட்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் மூலக்கூறுகள், இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த விட்டமின் சி மைட்டோகாண்டிரியாவை பாதுகாப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பானம், நோய்க்கு மருந்து என்று சொல்ல முடியாது. எல்லா நோயையும் எதிர்க்க கூடிய சக்தியை இது தரும். இந்த பானத்தை சாப்பிடும் போது, 80 சதவீதம் சத்து உடலில் சேர்கிறது. அதனால் நோயில் இருந்து விரைவாக குணமாக முடியும்.

கொரோனா நோயாளிகள் முக்கியமாக சளி பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு என்ன?



சளி, தலைவலிக்கு எளிய வைத்தியம் இருக்கிறது. சட்டியில் தண்ணீர் எடுத்து, நொச்சி இலை, மஞ்சள் துாள், கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், உடம்பில் உள்ள கெட்ட வியர்வை எல்லாம் வெளியேறி விடும். சளியும் இருக்காது, தலைவலியும் இருக்காது. தொண்டையில் வலி, கரகரப்பு இருந்தால் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் சரியாகி விடும். வயிறு பொருமல் என்றால், நான்கு மிளகு, ஒரு வெற்றிலை, இரண்டு உப்புக்கல் மென்று தின்றால் சரியாகி விடும். இதை வீட்டில் செய்து கொண்டால் நல்லதுதான்.

சித்த வைத்திய முறையில், கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்ததில், மக்களிடம் என்ன 'பீட்பேக்' கிடைத்துள்ளது?

எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை, கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என, 3000 நோயாளிகளுக்கு மேல் வைத்தியம் பார்த்து இருக்கிறோம். எல்லோரும் முழுமையாக குணம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த பாதிப்பும் வரவில்லை.

டாக்டர் சரவணன்

sidhasaravanan@gmail.com

தொடர்புக்கு:9043212789

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us