sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

துாக்கத்தை குலைக்கும் சொட்டு மருந்து அபாயம்

/

துாக்கத்தை குலைக்கும் சொட்டு மருந்து அபாயம்

துாக்கத்தை குலைக்கும் சொட்டு மருந்து அபாயம்

துாக்கத்தை குலைக்கும் சொட்டு மருந்து அபாயம்


PUBLISHED ON : நவ 12, 2023

Google News

PUBLISHED ON : நவ 12, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளிர்காலம், மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷத்தால் மூக்கடைப் பால், காதில் வலி இருந்தால் அலட்சியம் செய்வது தவறு.

மூக்கின் பின்னால் உள்ள அடினாய்டு என்ற உறுப்பில் தொற்று ஏற்பட்டு வீங்கி, மூக்கடைப்பை ஏற்படுத்தலாம். மூக்கு அடைப்பதால் காதில் ஏற்படும் வலி, கேட்கும் திறன் குறைவதை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது.

காதின் உள்ளே நீர் சேருவதால், ஒலிகளை கேட்க முடியாமல், எதிலும் கவனம் இல்லாமல் இருப்பர். சளியால் ஏற்பட்ட வலி, காதை அடைக்கிறது என்று தவறாக புரிந்து கொள்கிறோம்; மூக்கின் பின்னால் இருக்கும் காதுக்கு செல்லும் குழாய் அடைத்து, காது சவ்வின் பின்புறம் நீர் கோர்த்து இருக்கும். சைனஸ், டான்சிலிடிஸ் போன்ற கோளாறுகள் இருந்தாலும், சளி தொந்தரவுகள் ஏற்பட்டு, சீழ் பிடிக்கலாம். இதில் துர்நாற்றம் வீசினால் எலும்புகள் பாதித்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

சளியை வெளியில் எடுப்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்து மூக்கு சிந்தவே கூடாது. இதுவும் காதுகளில் உள் நரம்புகளை பாதிக்கும். மூக்கடைப்பிற்கு அடிக்கடி சொட்டு மருந்து போடுவது தவறு. சொட்டு மருந்திற்கு பழகி விட்டால், அதன்பின் சொட்டு மருந்து போட்டால் தான் துாக்கம் வரும் என்ற நிலை வந்து விடும்.

டாக்டர் சுந்தர் கிருஷ்ணன்,

காது, மூக்கு, தொண்டை மருத்துவ ஆலோசகர்,

சென்னை
95001 96702






      Dinamalar
      Follow us