உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 04, 2016

அ நிறம் | அளவு
வெல்லம்: வெயிலில் போகும்போது, என்ன தான் கையில் தண்ணீர் பாட்டிலை தவறாமல் எடுத்துச் சென்றாலும், சமயங்களில் நாக்கு வறண்டு போகும். இதைத் தவிர்க்க வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால், உடனடியாக வறட்சி தீரும்; களைப்பு நீங்கும்.
நெய்: வறட்சியான சருமம் இருப்பவர்களுக்கு, இந்தக் கோடையில் சருமம் இன்னும் அதிகமாக வறண்டு போகும். சில துளிகள் நெய்யை உச்சந்தலை, உள்ளங்கால், உள்ளங்கையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். உடல் முழுவதும் நெய் தேய்த்தும் குளிக்கலாம். வறண்ட சருமம் பளபளப்பாகும்.
டாக்டர் ரேச்சல் ரேபேக்கா பிலிப்
ஆயுர்வேத சிறப்பு மருத்துவர்
