தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்!: கருவிலேயே செய்யலாம் கரெக் ஷன்!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: கருவிலேயே செய்யலாம் கரெக் ஷன்!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: கருவிலேயே செய்யலாம் கரெக் ஷன்!


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறைபாடு உள்ள குழந்தை உருவாவது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. கரு உருவாகும் போதே குறைபாடுகள் இருந்தால், அல்ட்ரா சவுண்டு கருவிகளால், எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

கருவின் இதயத்தில் உள்ள குறை, கரு உருவான, 13வது வாரத்திலும்; கரு வளர்ச்சியில் ஏதேனும் பெரிய அளவில் குறைபாடு இருந்தால், 18வது வாரத்திலும் கண்டுபிடிக்க இயலும். நுணுக்கமாக இருக்கும் குறைகளை, 22வது வாரத்தில், கண்டுபிடித்த விடலாம்.

குறைபாடுகளுடன் கரு உருவாவதற்கு முக்கிய காரணம், அதிகரித்து விட்ட திருமண வயது. பெண் பிறக்கும் போதே, அவளுடன் இருக்கும் கரு முட்டையின் திறன், வயது ஆக ஆக மாறும்.

கரு முட்டையில் உள்ள குரோமோசோம்களிலும், இயற்கையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு ஆணின் குரோமோசோமும், பெண்ணின் குரோமோசோமும் சேர்ந்து தான், கரு உருவாகிறது.

வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும். 20 வயதில் இருப்பதைப் போன்ற திறனுடன், 35 வயதில் இருக்காது. வயதான குரோமோசோம்கள் கொண்ட கரு, குறைபாடுகளுடன் உருவாகலாம். குறிப்பாக, டவுன் சிண்ட்ரோம் உட்பட, பல மன நல குறைபாடுகள் வரலாம்.

சில சமயங்களில், 46 குரோமோசோம்களுக்கு பதிலாக, 45 அல்லது 47 என்று சேரும். நிச்சயம் இது குறையுள்ள குழந்தையாகவே பிறக்கும். வாழ்வது இயலாத காரியம் எனும் போது, பல சமயங்களில், இயற்கையே அந்தக் கருவை அழித்து விடும். கருச் சிதைவிற்கு இதுவும் ஒரு காரணம்.

அடுத்தது, மரபியல் ரீதியான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். மூன்றாவதாக, வயதாகி குழந்தை பெறும் போது, வயது காரணமாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பொதுவான உடல் பிரச்னைகள் வரலாம். கர்ப்பம் தரிக்கும் போது அல்லது கர்ப்பக் காலத்தில் நீரிழிவு இருந்தால், கருவிலேயே இதய, நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம்.

அடுத்தது, சுவாசிக்கும் காற்றில் இருந்து, நீர், உணவு என்று அனைத்திலும், தற்போது வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. இவையெல்லாம் கருவின் வளர்ச்சியை பாதிப்பதால், குறையுள்ள கருவாக உருவாக, வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில வைரஸ் தொற்றுகள், கருவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நவீன அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில், கருவில் உள்ள நுணுக்கமான குறைகளை கண்டறிவதில், எவ்வளவு துாரம் நன்மை உள்ளதோ, அதே அளவிற்கு சமயங்களில் பிரச்னையும் உள்ளது.

குழந்தைக்கு பாதங்கள் சற்றே வளைந்து இருக்கிறது போன்ற சிறிய குறை இருப்பது தெரிந்தாலும், இந்தக் குழந்தை வேண்டாம் என்று சொல்லி, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துபவர்களும் உண்டு. சிக்கலான பிரச்னைகளை கருவிலேயே சரி செய்ய முடியும் போது, சிறிய பிரச்னைகளை எளிதாக சரி செய்து விட முடியும்.



டாக்டர் ஜெயராணி காமராஜ்,

மகப்பேறு மருத்துவர், சென்னை

jeyaranikamaraj@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us