தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்!: இருபத்தி ஒன்றில் ஏற்படும் பிரச்னை!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: இருபத்தி ஒன்றில் ஏற்படும் பிரச்னை!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: இருபத்தி ஒன்றில் ஏற்படும் பிரச்னை!


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாயிடமிருந்து, 23 குரோமோசோம்களும், தந்தையிடம் இருந்து, அதே எண்ணிக்கையிலும், குழந்தைக்கு வருகிறது.

இதில், 21வது குரோமோசோமில் ஏற்படும் கோளாறால், பிறவியிலேயே ஏற்படுவது, 'டவுன் சிண்ட்ரோம்' எனப்படும், மரபியல் கோளாறு.

இந்த குறையுடன் பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மனக் கோளாறுடன் இருக்கும். 700 - 800 குழந்தைகளில் ஒரு குழந்தை, இது போன்ற குறைபாடுடன் பிறக்கிறது.

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில், அதாவது, 12 - 13 வாரங்களில், ரத்தப் பரிசோதனையும், என்.ஐ.பி.டி., எனப்படும், 'ஸ்கேன்' பரிசோதனையும் செய்வதன் மூலம், கர்ப்பத்தில் உள்ள கரு, டவுன் சிண்ட்ரோம் குறையுடன் பிறக்க வாய்ப்புகள் உள்ளதா என்பதை, 99.9 சதவீதம் துல்லியமாக அறிய முடியும்.

எனவே, 37 வயதிற்கு மேல் திருமணம் செய்பவர்கள், மரபியல் குறைபாடு உள்ள குடும்பத்தில் இருப்பவர்கள், அவசியம் இந்த பரிசோதனையை செய்வது நல்லது.

கர்ப்பத்திற்கு திட்டமிடுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், தினமும் ஒரு போலிக் ஆசிட் மாத்திரை சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தைக்கு மூளை, முதுகுத்தண்டு தொடர்பான பிரச்னைகள் இல்லாமல் இருக்கும்.

டாக்டர் தீப்தி ஜம்மி,

மகப்பேறு மருத்துவர்,

சென்னை.

rdeepthijammi@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us