sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜன 04, 2017

Google News

PUBLISHED ON : ஜன 04, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?

ஆம். செல்லப் பிராணிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. நாய் மற்றும் பூனை தான் அதிகளவில் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. கோழி, வாத்து, வான் கோழி, புறா, மீன், முயல், அணில், குதிரை, எலி, லவ் பேட்ஸ் போன்றவைகளும், அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

மேற்சொன்ன விலங்குகளைத் தவிர, வேறு என்னென்ன உயிரினங்களால் அலர்ஜி ஏற்படுகிறது?

வீடுகளில் உலாவும் பல்லி, கரப்பான் பூச்சிகளின், கழிவுகள், அலர்ஜி ஆகும் பொருட்களில் முக்கியமானவை.



இவைகளை வளர்ப்பதால்எப்படி அலர்ஜி ஏற்படும்?


வளர்ப்பு பிராணிகளின் இறந்த செல்கள், உதிர்ந்த ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக்கழிவுகள் காற்றில் கலப்பதால், அதை சுவாசிக்கும் நமக்கு, உடல் பாதிப்பு ஏற்படுவதோடு, சரும பாதிப்பும் ஏற்படுகிறது.



எவ்வகையான பாதிப்புகளை இவை உருவாக்குகின்றன?

இந்த அலர்ஜி பொருட்கள் உடலுக்குள் சென்றதும் ஆன்டிஜென்களாக செயல்படும். அப்போது ரத்தத்தில் இம்யூனோகுளோபுலின் - இ எனும் எதிர் புரதம் உருவாகும், இது அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகளுடன் இணைந்து, சில வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, அங்குள்ள நரம்புகளைத் தாக்கும்.

இவ்வாறு நரம்புகள் பாதிப்படையும் போது, எவ்வகையான உடல் கோளாறுகள் ஏற்படும்?

மூக்கு ஒழுகுவது, தும்மல், சரும அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து வீங்குதல் போன்றவை ஏற்படும்.

அறிகுறிகள் என்னென்ன?

மூக்கு ஒழுகுதல், வறட்டு இருமல், ஆஸ்துமா, நெஞ்சு இறுக்கம், கண்ணீல் நீர் வடிதல், எரிச்சல், கண்கள் சிவப்பது, இமைகள் வீங்குவது, தோல் அழற்சி, கரப்பான் நோய், துாக்கமின்மை, சோர்வு, தொண்டை வலி போன்றவை.

ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வளர்ப்பு பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?

கட்டாயமாக ஏற்படும். ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு, வளர்ப்பு பிராணிகளால், அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு, 40 சதவீதம் அதிகம் உள்ளது.

என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

ரத்தப் பரிசோதனை அலர்ஜியை அறிய உதவும். மற்றும் தோல் பரிசோதனைகள் உள்ளன.

சிகிச்சைகள் ?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை உள்ளது. இதோடு ஸ்டிராய்டு மருந்துகள் கொடுக்கப்படும். இம்யூனோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.

வளர்ப்பு பிராணியால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க?

அலர்ஜி உள்ளவர்கள், வீட்டில் எந்தப் பிராணியையும் வளர்க்காமல் இருப்பதே நல்லது. செல்லப் பிராணிகளை தொட்டு துாக்குவது, முத்தம் கொடுப்பது, கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளித்து, வீட்டை சுத்தம் செய்வது அவசியம். வளர்ப்பு பிராணிகளை வளர்க்க ஆசைபடுபவர்கள், அலர்ஜிக்கான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

கா.சுகுமாறன்

தொற்று நோய் சிறப்பு நிபுணர்.






      Dinamalar
      Follow us