/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனானில் இந்திய சுதந்திர தின விழா
/
லெபனானில் இந்திய சுதந்திர தின விழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட் ; லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் நூர் ரஹ்மான் ஷேக் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையிலிருந்து முக்கிய பகுதிகளை தூதர் வாசித்தார்.இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--- நமது செய்தியாளர், காஹிலா.
Advertisement