/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் நூலகத்துக்கு தமிழ் நூல்கள்
/
துபாய் நூலகத்துக்கு தமிழ் நூல்கள்

துபாய்: துபாய் நகரின் மிகவும் முக்கியமான அடையாளமாக முஹம்மத் பின் ராஷித் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் அரபி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
மதுரை கவிஞர் இரா.இரவியின் நூல்களான மின்னல் ஹைக்கூ, திரும்பிப் பார்க்கிறேன், கட்டுரைக் களஞ்சியம், இரா.இரவின் ஹைக்கூ உலகம் ஆகிய நான்கு நூல்கள் மற்றும் இந்து தமிழ் திசை வெளியிடான பேராசிரியர், முகமது அப்துல் காதர் எழுதிய வெல்லப்போவது நீதான் உள்ளிட்ட ஐந்து நூல்களும் நூலக அலுவலர் முஹம்மதுவிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.
நூலகத்துக்கு தொடர்ந்து நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

