sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு

/

ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு

ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு

ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு


நவ 07, 2025

Google News

நவ 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.
கண்காட்சியில் அமைந்துள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில் துபாயில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பஜிலா எழுதிய 'ரேட்டட் ஹலால்' என்ற ஆங்கில நாவல் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவுக்கு அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். இம்தாதுல்லா வரவேற்றார்.
நூலை தமிழக பிரமுகர் எஸ்.எம். இதாயத்துல்லா வெளியிட முதல் பிரதியை அமீரக கல்வித்துறை அலுவலர் நவால் அலி அல் கிந்தி பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய எஸ்.எம். இதாயத்துல்லா, தமிழக பெண் ஒருவர் ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நாவல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி அரபகத்தில் வெளியிடுவது பெருமையளிக்கிறது. அவரது நூலை வாங்கி நாம் அனைவரும் உற்சாகப்படுத்த வேண்டும். தொடர்ந்து அவர் பல்வேறு நூல்களை வெளியிட வேண்டும் என்றார்.
அமீரக பிரமுகர் நவால் அலி அல் கிந்தி எழுத்தாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஃபாஸ் கூரியர் ஃபாரூக், ஹசன், இல்யாஸ், பசிலா ராணி, கிரீன் குளோப் ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேனர். நூலாசிரியர் பஜிலா ஏற்புரை நிகழ்த்தினார். தனக்கு இந்த நூலை வெளியிட வாய்ப்பு வழங்கிய ஷார்ஜா புத்தக ஆணையத்துக்கு நன்றி தெரிவித்தார். ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கில் எனது நூல் வெளியிடப்படுவது எனது வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
----ஷார்ஜாவில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us