/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
வாழ்வியல் இலக்கியப் பொழில்" மாதாந்திர நிகழ்ச்சி
/
வாழ்வியல் இலக்கியப் பொழில்" மாதாந்திர நிகழ்ச்சி
ஜன 16, 2026

'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 99ஆவது மாதாந்திர நிகழ்ச்சி, பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது. 'மூப்பில்லா முதல்மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. பொதுப்பிரிவில், அமைப்பின் உறுப்பினர் தீபிகா வரவேற்றார். வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.
சிறுவர்கள் அங்கத்தில், வர்ணிகா வினேஷ் மனோ தமிழ்ப் பாடல் கூறினார். நிலாகண்மணி அருண்நிஷாந்த் தமிழ்ப்பாடல் பாடினார். சாராகண்மணி அருண்நிஷாந்த் தமிழ்ப்பாடல் பாடினார். சிவமதி சிவானந்தம் 'நன்னெறிப்பாடல்' பாடினார். மாதவவீரா அழகுராஜ் 'திருக்குறள்' பற்றி கூறினார். ரியான்ஷி முத்துக்குமார் தமிழ்ப்பாடல் பாடினார். மேகவர்தினி அருள்பிரகாஷ் 'நன்னெறிப்பாடல்' பாடினார். தமிழோவியா அருள்பிரகாஷ் 'நன்னெறிப்பாடல்' பாடினார்.
ஜீவஜோதிகா கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரையில் 'வெண்பாநன்பா' என்னும் தலைப்பில் பேசினார். இணையம்வழி தொடக்கப்பள்ளி மேலாண்மை குழுத் தலைவி த. சுகந்தி, கோ. மாசிலாமணி உரையாற்றினர். நிகழ்ச்சி காணொளியாக முகநூல்வழி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர். மோகனபிரியா நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். உஷாகிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
முகநூலில்கண்டுகளிக்க:
https://www.facebook.com/share/v/1BDbhVvs8H/
அமைப்பின்இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com
- சிங்கப்பூரிலிருந்து நமது வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
Advertisement

