sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

/

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை


மார் 16, 2025

Google News

மார் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.

சிங்கப்பூர் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தென்கிழக்கு வட்டார மேயருமான முகம்மது ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது சிறப்புரையில் “நாம் ஒன்றுபட்ட சமூகமாக என்றென்றும் திகழ வேண்டும் என்றும், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் ஆற்றிவரும் கல்விசார்ந்த சமூக நலப்பணிகள் பாராட்டுக்குரியது” என்றும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியில் முதியோர்களைப் பராமரித்து வரும் அற நிறுவனங்களாகிய ஸ்ரீநாராயண மிஷன் மற்றும் ஜாமியா முதியோர் இல்லத்திற்கு 10 சக்கர நாற்காலிகளை இச்சங்கம் நன்கொடையாக வழங்கியது. இந்த நன்கொடையை ஸ்ரீநாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் பிரதிநிதி சரவணன், ஜாமியா சிங்கப்பூர் அற நிறுவன சமய நல்லிணக்கப் பணி மூத்த இயக்குநர் முனைவர் எச். முஹம்மது சலீம் ஆகியோர் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.


பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் மௌலவி கலீல் அஹ்மது ஹசனி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி சிற்றுரையாற்றினார்.


வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், “இந்த ஆண்டு இறுதியில் சங்கத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்வு சங்கத்தின் 143வது நிகழ்ச்சி” என்றும் குறிப்பிட்டார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது ஹபீபுல்லா இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.


பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், தொழிலதிபர்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us