உள்ளூர் செய்திகள்

எல்லாம் வல்ல சித்தர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ்பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். புதன் தலமாக மதுரை விளங்குவதால், புதன் கிழமையில் இவரை வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும். பக்தர்கள் பூக்கூடாரம் நேர்த்திக்கடனை சித்தருக்கு செய்கின்றனர். சித்தராக எழுந்தருளிய சிவன் கல்யானைக்கு கரும்பு கொடுத்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இவருக்கு 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் பெயருண்டு. இவரது சன்னதி அருகில் கல்யானை உள்ளது.