உள்ளூர் செய்திகள்

அபிராமா அம்பிகை

அனலன் என்னும் அசுரனை அழிக்க, காளி வடிவத்தில் அம்பிகை பூலோகம் வந்தாள். உக்கிரம் மிக்க அவளை சிவபெருமான் சாந்தப்படுத்தி மணந்து கொண்டார். மணக்கோலத்தில் அவள் அழகாக இருந்ததால், 'அபிராமா அம்பிகை' எனப் பெயர் பெற்றாள். 'அபிராமம்' என்பதற்கு 'அழகு' என்பது பொருள். அவளே திண்டுக்கல்லில் அபிராமியாக வீற்றிருந்து அருள்கிறாள். இங்கு சிவன் சன்னதி இருந்தாலும், அம்பிகைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. கோயிலும் 'அபிராமி அம்மன் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. 'அபிராமா அம்பிகை' என்பதே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்று ஒரு முறை சொன்னாலே அம்பிகைக்குரிய எல்லா மந்திரத்தையும் சொன்ன பலன் கிடைக்கும். இக்கோயில் துாணில் பால துர்கை காட்சி தருகிறாள்.