மனசுத்தம் உள்ளவரின் நண்பன்
* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.* கடவுள் நமக்கு பயம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* மனசுத்தமாக இருக்கும் ஒருவனுக்கு அந்த நாட்டை ஆள்பவன் கூட நண்பனாகத் தான் இருப்பான். அவனுடைய உதட்டு அசைவை அனைவருமே விரும்புவர்.* அவர் (கர்த்தர்) தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.* நீ ஒருவனிடம் எதையாவது அநியாயமாக வாங்கினால் நான்கு மடங்காக திரும்ப செலுத்த வேண்டி வரும்.* பெற்றோர்களே! பாவச் செயல்களுக்கு உங்கள் குழந்தைகளை உட்படுத்த வேண்டாம், உட்படுத்தினால் ஒரு நாள் நாமும் கதற நேரிடும்.* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.-பைபிள் பொன்மொழிகள்