நல்லுரைகளைக் கேளுங்கள்
UPDATED : ஜூலை 05, 2011 | ADDED : ஜூலை 05, 2011
* பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்பொழுதும் புகழ்ந்து போற்றுவேன்.* ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாய் இருக்கும், அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன்கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.* இறைவன் எத்தனை இனியவர் என்று சுவைத்துப்பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறு பெற்றோர்.* நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோம்.* குழந்தைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள் மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.* குழந்தைகளே! நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவு தரும் நன்மொழிகளைப் புறக்கணிக்கிறவன் ஆவாய்.- பைபிள்