தைரியமாக இருங்கள்
UPDATED : டிச 04, 2012 | ADDED : டிச 04, 2012
* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன் என்று தைரியமாகச் சொல்லலாமே! * மனிதனின் மனதிலிருந்து வெளி வருபவைகளே அவனை அசுத்தபடுத்துகின்றன. ஏனெனில், அவனுடைய இருதயத்துக்குள்ளிருந்து புறப்பட்டு வருவதெல்லாம் கெட்ட எண்ணங்கள். * கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்து இருக்கிறார்.* இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும் பகலில் பறந்து வரும் அம்புக்கும் பயப்படாதிருப்பாயாக. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும் நடுப்பகலில் நாசமாகும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாயாக.* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.- பைபிள் பொன்மொழிகள்