இரக்கம் உள்ளவராய் இருங்கள்
UPDATED : ஆக 22, 2012 | ADDED : ஆக 22, 2012
* நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.* உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ளுகிறவன், உங்கள் வஸ்திரத்தையும் எடுத்துக் கொள்ள தடை பண்ணாதீர்கள்.* மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்.* உங்கள் பரமபிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள்.* உம்மிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள். உம்முடையதை எடுத்துக் கொள்கிறவனிடத்தில் அதைத் திரும்பிக் கேளாதீர்கள்.* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலை அடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சொந்தமாக்கி கொள்ளுவார்கள்.* சிறு விஷயத்தில் தவறாக நடப்பவன் பெரிய விஷயத்திலும் தவறாகவே நடப்பான்.- இயேசுநாதர்