உள்ளூர் செய்திகள்

பொறுமையைக் கடைபிடியுங்கள்

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மை ஆக்குகிறான்.* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.* கடவுளின் ஊழியன் வழக்காடும் தன்மையுள்ளவனாய் இருக்கக்கூடாது. எல்லா மனிதர்களிடமும் கண்ணியமாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும் பொறுமைசாலியாகவும் இருக்கவேண்டும்.* எனக்கு வறுமையையோ செல்வப்பெருக்கையோ தர வேண்டாம். எனக்கு அன்றாடத் தேவையான உணவை மட்டும் ஊட்டும்.* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் உள்ளவை. ஆனால், பகையாளி ஒருவன் வாரி வழங்கும் முத்தங்களோ உள்ளூரப் பித்தலாட்டமானவை.- பைபிள்