உள்ளூர் செய்திகள்

குற்றம் மன்னிக்கப்படும்

* மவுனாமயிருந்தால் முட்டாள் கூட அறிவாளி என மதிக்கப்படுவான். வாயை மூடிக் கொண்டிருப்பவனே புத்திசாலியென போற்றப்படுவான்.* உன்னை உயர்த்திக் கொள்வதில் ஏதாவது நீ மூடத்தனமாகச் செய்து இருந்தால், அல்லது தீங்கைப் பற்றி எண்ணமிட்டிருந்தால் உன் வாயை மூடிக் கொண்டிரு.* கொழுத்த எருதுக்கறியை பகை@யாடு உண்பதை விட அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.* தேசம் இன்னொரு தேசத்துக்கு எதிராக வாளை உயர்த்தாதிருக்கட்டும். இரண்டும் இனிமேல் யுத்தத்தைக் கற்காமல் இருக்கட்டும்.* அறிவாளிகள் புகழைச் சுவீகரிப்பார்கள். ஆனால், அவமானம் தான் முட்டாள்களின் மேம்பாடாயிருக்கும்.* நீங்கள் மனிதனின் குற்றங்களை மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.* அயலவனை முகஸ்துதி செய்பவன் அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு சிறந்தது. -பைபிள் பொன்மொழிகள்