செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே
* அனைவருக்கும் கடவுளும் தந்தையும் ஆனவர் ஒருவரே; அவர் அனைவருக்கும் மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும் செயலாற்றுகிறவர். அனைவருக்குள்ளும் இருக்கிறவர்.* ஒரே மனத்தினராய் இருக்குமாறு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தரும் கடவுள், உங்களுக்கு அருள் புரிவார்.* பகைமை என்னும் சுவரை, கடவுள் தமது உடலில் ஏற்று துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.* நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும், கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டுவிலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.* களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமலும், உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமல் இருங்கள்.* ஒருவர் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பிக் காட்டுங்கள். - பைபிள்