புகழை விரும்பாதீர்கள்
* கதிரவனும், கேடயமுமாய் இருக்கும் கடவுள் நமக்கு அருளையும், மேன்மையையும் அளிப்பார்.*மன ஒற்றுமை கொண்டிருங்கள், அமைதியுடன் வாழுங்கள், அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.*கடவுள் எத்தனை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.* ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி, ஒரு விளக்கு. அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.* இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.* ஞானமும் அறிவும் உனக்கு இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன்கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.* தேனை மிகுதியாகச் சாப்பிடுவது எவ்வாறு நல்லது இல்லையோ, அதேபோல் புகழை மிகுதியாக விரும்புவதும் நல்லதல்ல.-பைபிள் பொன்மொழிகள்