விரயம் செய்யாதீர்கள்
* உங்கள் நெறியில் (சமயத்தில்) அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள். (திருக்குர்ஆன்5:77)* (இறைவனின் அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும், கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவு இந்த மிதமிஞ்சிய இருநிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும். (திருக்குர்ஆன் 25:67)* உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக இறைவன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 7:31)* உமது தொழுகையில் உமது குரலை மிக உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையே மிதமான தொனியைக் கடைபிடிக்கவும். (திருக்குர்ஆன் 17:110)* உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உனது குரலை சற்றுத் தாழ்த்திக் கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது கழுதையின் குரலாகும். (திருக்குர்ஆன் 31:19)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)