கணவனின் கடமைகள்
* தாய் தந்தையரும், நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அச்சொத்து குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே...! இந்தப் பங்கு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும். *தங்கள் மனைவியரை நெருங்குவதில்லையென்று சபதம் செய்து விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதத்தவணையுண்டு. அதற்குள்(தங்கள் மனைவியரிடம்) அவர்கள் திரும்பி விட்டால் நிச்சயமாக இறைவன் மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான்.* நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்து புறக்கணித்து விடுவீர்களானால், மேலும் மன்னிப்பீர்களானால் திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.*அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பாவிட்டாலும், பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், இறைவன் அதில் அநேக நன்மைகளை வைத்திருக்கக்கூடும்.(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)