நம்பிக்கையும் நற்செயலும்
* இறைவன் கூறுகின்றான்: எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும்(தர்மமும்) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.* நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கி விடுவோமா என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக் கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன?* நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா?* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை ஒருவன் இறைநம்பிக்கையாளனாக மாட்டான்.* எவருடைய அண்டை வீட்டார் அவரது துன்பங்களை விட்டுப் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் இறைநம்பிக்கை இல்லாதவர்.* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறைநம்பிக்கையின் பகுதிகளாகும். (வேத வரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)