பலன் தரும் தெய்வத்தன்மை
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத்தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நரகாக்கினியல் மூழ்கடிக்கின்றன.* நம் சரீர முயற்சியின் பலன் சிறிதளவே ஆகும். ஆனால் தெய்வீகத் தன்மையோ எல்லாவற்றையும் விட அதிகமான பலன் தருவதாகும்.* நேர்மையாளனுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும். * நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும். பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்துவிடாதே.* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவனை வாழ்த்தும்.* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்த படியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.- பைபிள் பொன்மொழிகள்