கடவுளே வழிநடத்துபவர்
* நேர்மையாளனின் பாதை மேன்மேலும் உயர்ந்து கொண்டே போகும். தீயவர்களின் பாதையோ காரிருள் போன்றது. எதில் இடறி விழுகிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.* தன் வழியை உணர்வதே அறிவுள்ளவனின் ஞானமாகும். ஆனால் முட்டாள்களின் புத்தியீனமோ ஏமாற்றமே.* வாக்குறுதி கொடுத்து அதைக் கொண்டு செலுத்தாமல் இருப்பதை விட, வாக்குறுதி செய்யாமல் இருப்பதே சிறந்தது.* உற்சாகத்துடன் கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள். பாடிக் கொண்டே அவர் சன்னதிக்கு வாருங்கள்.* குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் தான் விழுவார்கள்.* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறான்.* நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும், ஊனர்களையும், முடவர்களையும், குருடர்களையும் கூப்பிடுவாயாக.- பைபிள் பொன்மொழிகள்