தெய்வீகத்தன்மை வேண்டும்
* எவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறனோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனையே பகைக்கின்றவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றான்.* நையாண்டிக்காரன் அறிவைத் தேடுகிறான். அதை அவன் கண்டறிவதில்லை. ஆனால், உணர்வுள்ளவனுக்கோ அறிவு வெகு சுலபமாய் வரும். * எந்த ராஜாவும் தன் படைபல மிகுதியால் இரட்சிக்கப்பட மாட்டான். எந்தப் பலமான மனிதனும் தன் பலத்தின் மிகுதியினால் தப்பிவிட மாட்டான்.* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்யத்திற்குள் நுழைவதை விட, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீக தன்மையோ அதிகமான பலன் தரும். எந்த விஷயத்திலும் பலனுள்ளது, இப்போதைய வாழ்விற்கும், இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாக இருக்கும்.* அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவன் இடைஞ்சலில் இருந்து விடுபடுவான்.- பைபிள் பொன்மொழிகள்