தயாளகுணம் வேண்டும்
* காணப்படுகிறவைகள் அநித்தியமானவை. காணப்படாதவைகளோ நித்தியமானவை.* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.* முன்போலவே, மண் மண்ணுக்குத் திரும்பி போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.* நான் விரும்புவது பலியை அல்ல. அன்பு நிறைந்த தயாளத்தை! ஏனெனில் நான் அழைக்க வந்தது நீதிமான்களையல்ல. பாவிகள் மனந்திருந்தவே.* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அந்த அளவு உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படுவதுமின்றி கூடவும் கொடுக்கப்படும்.* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் இவைகள் ஆராய்ந்து அறிய முடியாதன. * அறம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால், பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவாகும். * கத்தி எடுத்தவன் அந்த கத்தியாலேயே அழிந்து போவான்.- பைபிள் பொன்மொழிகள்