ஏழையிடம் கருணை கொள்க!
UPDATED : ஜூன் 12, 2012 | ADDED : ஜூன் 12, 2012
* தீபக்கால் வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தரும். அதுபோல, மனிதர்கள் உங்கள் முதற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். * இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கி விட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.* ஏழை மீது இரக்கம் வைப்பவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான். * ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான்.* எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.* கடவுள் நீதியுள்ளவர். நீதியை நேசிப்பவர். செம்மையானவனையே அவருடைய முகம் நோக்குகிறது. * துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.- பைபிள் பொன்மொழிகள்