உள்ளூர் செய்திகள்

கேட்பவர்க்கு உதவுங்கள்

* ஆலோசனையாளர்கள் பலர் இருந்தால், அவர்களின் மத்தியில் தான் பாதுகாப்பு இருக்கிறது.* சுமையைத் தாங்க முடியாமல் வருந்துபவர்களெல்லாம் என்னருகில் வாருங்கள். நான் (இயேசு) உங்களைத் தேற்றுவேன்.* நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரி தான். ஆயினும் ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு, உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தை திருப்பாதே.* அன்பையும் நற்செயல்களையும் தூண்டும்படியாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வோமாக.* புரிந்து கொள்பவனுக்கு, ஞானம் அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக் கோடி வரை தேடியலையும்.* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.- பைபிள் பொன்மொழிகள்