உள்ளூர் செய்திகள்

நேர்மை உன்னைக் காப்பாற்றும்

* என் அகத்தைச் சுத்தமாக்கினேன். என் தீவினையிலிருந்து தூய்மையானேன் என்று எவன் தான் சொல்ல முடியும்!* அகத்தூய்மையுடையோருக்கு எல்லாமே தூய்மை. * அகத்தூய்மையை விரும்புபவனை, அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.* அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.* நாக்கு ஒரு சிறிய அங்கமாயிருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங்களையும் பிரமாதப்படுத்தும். ஒரு சிறு நெருப்புப் பொறி பெரிதாகக் கிளறி விடுவதைப் பார்.* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமேயில்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத்தான் அது அசுத்தமாயிருக்கிறது.- பைபிள் பொன்மொழிகள்