நானே உலகின் ஒளி
UPDATED : டிச 20, 2011 | ADDED : டிச 20, 2011
* ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருகாலமும் பசியடையான். விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலமும் தாகமடையான்.* இருக்கிறவரும், இருந்தவரும், மீண்டும் வருகிறவருமாகிய சர்வ வல்லவராகிய நான், ஆதியும், அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்.* இரண்டு பேர் மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடி இருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன். நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். * நானே, வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னைக் கண்டவன் கடவுளை கண்டவன். நானும் கடவுளும் ஒன்றாக இருக்கிறோம். * நான் உலகின் ஒளியாயிருக்கிறேன். நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். * வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் தருவேன். - இயேசுநாதர்இன்று கிறிஸ்துமஸ்