உள்ளூர் செய்திகள்

பகிர்ந்து உண்டால் பசியாறும்

* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவி சாயுங்கள் மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.* தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டையும் இழிவையும் வருவித்துக் கொள்வான்.* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதே.* நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு, தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.* நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராவார்.* பெற்றுக் கொள்வதைவிட, கொடுத்தலே பேறுடைமை என்று கடவுள் கூறியதை எப்போதும் நினைவு கூருங்கள்.- பைபிள்