அன்பைத் தூண்டுங்கள்
* கற்புள்ள பெண்மணி புருஷனுக்குக் கிரீடம். ஆனால், அவமானத்தை உண்டாக்குபவள் அவனுக்கு எலும்புருக்கி நோய் போலாகும்.* இளம் பெண்கள் மன அடக்கம் பெறவும், தங்கள் கணவர்களைக் காதலிக்கவும், குழந்தைகளை நேசிக்கவும் வேண்டும்.* ஒவ்வொருவனும் காது கொடுத்துக் கேட்பதில் துரிதமாகவும், பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.* நிந்தனைக்காரனைக் கண்டிக்காதே. அவன் உன்னைப் பகைப்பான். அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் உன்னை நேசிப்பான்.* அன்பையும் நற்காரியங்களையும் தூண்டும்படியாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வோமாக.* புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது அவன் எதிரிலேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக்கோடி வரை தேடியலையும்.* எந்தக் காலத்திலும் எவரும் கடவுளைக் கண்டதில்லை. நாம் ஒருவரையொருவர் நேசித்தால் நம் முன் கடவுள் வசிக்கிறார்.- பைபிள் பொன்மொழிகள்