நல்லதைக் கடைபிடிப்போம்
UPDATED : நவ 19, 2012 | ADDED : நவ 19, 2012
* உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும்.* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விடக் கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே மேலானது.* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பதே பாவம்.* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.* நீதியின் கனியாவது, அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.- பைபிள் பொன்மொழிகள்