பிறரிடம் அன்பு செலுத்துங்கள்
UPDATED : ஆக 14, 2012 | ADDED : ஆக 14, 2012
* அடக்குமுறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப் போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன்மீது உன் இதயத்தை வைத்துவிடாதே.* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.* எந்நேரமும் கேளிக்கை, கூத்து என வாழும் பெண்மணி உயிரோடு இருந்தாலும் செத்தவளுக்கே சமமாவாள்.* நாக்கு ஒரு சிறிய அங்கமாக இருந்தாலும் சிறிய விஷயங்களைக்கூட பிரமாதப்படுத்திவிடும்.* ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.- பைபிள் பொன்மொழிகள்