முதியவர்களை நேசியுங்கள்!
UPDATED : ஜன 04, 2013 | ADDED : ஜன 04, 2013
* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.* பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.* மாபெரும் செல்வத்தை விட நல்லபெயர் சிறந்தது.* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்குநாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.* என் வில்லை நான் நம்புவதில்லை. என் கத்தியும் என்னைக் காப்பாற்றாது.* கர்த்தரிடம் புதுப்பாட்டைப் பாடுங்கள். புவி அனைத்தும் கர்த்தரிடம் பாடுங்கள்.* உனது பிதாக்கள் நாட்டி வைத்த பண்டைய எல்லைக் குறிக்கற்களை அகற்றி விடாதே.* வயதானவரை அவமதிக்காதே. அவரை ஒரு தந்தையைப் போல நடத்து.* இளைஞர்களைச் சகோதரர்கள் போலவும், வயதான பெண்மணிகளைத் தாய்மார்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப் போலவும், முழுமனத் தூய்மையுடனும் கருது.* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும்.- பைபிள் பொன்மொழிகள்