அச்சம் தேவையில்லை
* ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட, தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்த மனிதன். * அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிடவேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், அமைதியும் நிறைந்த ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமே இல்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத்தான் அது அசுத்தமாய் இருக்கிறது. * கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வான் என்றும், அஞ்சமாட்டேன் என்றும் நான் தைரியமாய்ச் சொல்லலாமே! * நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாய் இருக்கும். அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பதில்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள். -பைபிள் பொன்மொழிகள்