உள்ளூர் செய்திகள்

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

* கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு, தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர, சகோதரிகளை வெறுப்போர் இருளில் தான் இருக்கின்றனர்.* எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் எல்லாருக்கும் மேலானவர். அவர் எல்லார் மூலமாகவும் செயலாற்றுகிறவர். எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் அவரே.* நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். * நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களென்று சொன்னவர் யார்? நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.* கடவுளைச் சார்ந்து தான் நாம் வாழ்கின்றோம். இயங்குகின்றோம். இருக்கின்றோம். கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.-பைபிள் பொன்மொழிகள்