எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!
* ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன் அவனுக்கு செவி கொடுப்பார்.* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும். * தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால், தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும். * நீங்கள் எந்த அளவு அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் கொடுக்கப்படும்.* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.* உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களால் அதிலிருக்கும் ஒரு ரோமத்தைக்கூட வெள்ளையாகவோ, கறுப்பாகவோ மாற்ற முடியாது.* ஜெபம் செய்யும் போது கடவுளிடம் எவற்றைக் கேட்டு கொள்வீர்களோ, அவற்றைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.- பைபிள் பொன்மொழிகள்