உள்ளூர் செய்திகள்

பிறருக்கு உதவுவதே நம் கடமை

* ஒருவருக்கும் உதவி செய்யவில்லைஎன்றால் சேவை செய்யலாம். அதன் மூலம் ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறாய்.* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதுமாகும்.* அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக கடவுளை நம்புகிறவனை விட, தன்னுடைய பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை நம்பாமலிருக்கும் ஒருவனுக்கு மன்னிப்பு கிடைத்து விடும்.* வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருக்க வேண்டும்.* மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்தன்மையை போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று சுட்டிக்காட்டுவதுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். * நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் சிறப்பும் தூய்மையும் பெறும். அதற்காக நம்மை நாம் முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வதுடன், பரிபூரணமாக்கிக் கொள்ள வேண்டும்.- விவேகானந்தர்