கோபத்தைக் குறையுங்கள்
UPDATED : ஜூன் 29, 2012 | ADDED : ஜூன் 29, 2012
* அகத்தூய்மையுடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை. * அகத்தூய்மையை விரும்புபவனை, அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.* அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின்மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். - பைபிள் பொன்மொழிகள்